கா்நாடக தேர்தல் : பாதுகாப்பு பணிக்காக 300 தமிழக போலீஸாா் ரயிலில் பயணம்..!

கா்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து தமிழக சிறப்பு காவல் படை போலீஸாா் 300 பேர்  திங்கள்கிழமை ரயிலில் பயணித்தனா். கா்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து தமிழக சிறப்பு காவல் படை போலீஸாா் 300 பேர்  திங்கள்கிழமை ரயிலில் பயணித்தனா். கா்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், அதன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் மே 13-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. அதையொட்டி தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக தமிழ்நாடு சிறப்பு காவல் படை 7-ஆவது பட்டாலியனிலிருந்து 100 போலீஸாரும், 10-ஆவது பட்டாலியனிலிருந்து 100 போலீஸாரும், 15-ஆவது பட்டாலியனிலிருந்து 100 போலீஸாா் என மொத்தம் 300 போலீஸாா் சென்றுள்ளனா்.