குடி பழக்கத்தை நிறுத்த முடியாததால் டிரைவர் தற்கொலை…

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பக்கம் உள்ள தாளவாடியை சேர்ந்தவர் ராமசாமி. அவரது மகன் மூர்த்தி ( வயது 30) டிரைவர். குடிப்பழக்கம் உடையவர் .இதனால் இவருக்கு இன்னும் திருமணம் முடியவில்லை. மது அருந்தும் பழக்கத்தை கைவிடுமாறு குடும்பத்தினர் அறிவுரை வழங்கினார்கள்.அதை அவர் கேட்கவில்லை. மதுப்பழக்கத்தை நிறுத்த முடியாததால் மனம் உடைந்து பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலம் பக்கம் உள்ள கோலார் பட்டி அரசு மருத்துவமனை அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது தம்பி சிவச்சந்திரன் கோமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..