கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் நெல்லை-தூத்துக்குடி புறப்பட்டது…

மழையால்பாதிக்கப்பட்டுவெள்ளைக்காடானதென்மாவட்டங்களுக்குஹெலிகாப்டர் மூலம் உணவுப்பொருள் வழங்குவதற்கும் தண்ணீரில் தத்தளிப்பவர்களை மீட்பதற்கும் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து நேற்று இரவு ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டது. இதில் மக்களுக்கு வழங்கபட வேண்டிய நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் 2விமானிகள் உதவியாளர்களுடன் புறப்பட்ட ஹெலிகாப்டர்நேற்று இரவு 9.40 மணிக்கு மதுரை விமானநிலையத்தில் தரையிறங்கியது. இந்தஹெலிகாப்டர் இன்று காலை 6 மணி அளவில் மதுரையில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டுசெல்கிறது.