போக்சோ வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள பழைய புதூரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 36 )இவர் 2012 ஆம் ஆண்டு நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்..இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பரிந்துரை செய்தார். மாவட்ட கலெக்டர் காந்தி குமாரை  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதன் பேரில் துடியலூர் அனைத்து மகளீர் போலீசார் இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து இதற்கான உத்தரவை கோவை மத்திய சிறையில் உள்ள அவருக்கு நேற்று வழங்கினார்கள்.