அடப்பாவி!! 91 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 21 வயது இளைஞர்- 4 ஆண்டு சிறை தண்டனை..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்91 வயது மூதாட்டி .இவர் அவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 2020 ஆண்டு நவம்பர் 10-ந் தேதி இரவு 11 மணிக்கு திடீரென்று அந்த மூதாட்டி சத்தத்துடன் அலறினார். உடனே வீட்டில் இருந்தவர்கள் போய் பார்த்தபோது பொள்ளாச்சி நேதாஜி நகரை சேர்ந்த மைதீன் ( வயது 21 )என்பவர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார். அவர் உறவினர்களை பார்த்ததும் தப்பிஓடிவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசார் மைதீன் மீது பலாத்காரம் செய்ய முயற்சி, அத்துமீறி வீட்டிற்குள் நுழைதல், ஆகிய பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் .இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது ,தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி குற்றம் சாட்டப்பட்ட மைதீனுக்கு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பிரிவுக்கு 2 ஆண்டு சிறையும், ரூ 500 அபராதமும், பலாத்காரம் செய்ய முயற்சி பிரிவுக்கு 2ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவர் தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.