ஈராக் மற்றும் சவுதி அரேபியாவிடம் இருந்து இறக்குமதியை குறைத்தது இந்தியா… ரஷ்ய கச்சா எண்ணைக்கு முன்னுரிமை..!

ர்வதேச அளவில் எண்ணை மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக், இந்தியாவுக்கான கச்சா எண்ணை வினியோகத்தில் பெரும் அளவில் ஆதிக்கம் செய்து கொண்டிருந்தது.

ஓபெக் கூட்டமைப்பில் உள்ள மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா பெரும் அளவில் கச்சா எண்ணையை இறக்குமதி செய்து கொண்டிருந்தது.
கச்சா எண்ணைவரத்தை கண்காணிக்கும் ஓபெக் நாடுகள் இந்தியாவுக்கு 72 சதவீத கச்சா எண்ணையை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன.

இதனால், பொருளாதார பலன் ஏப்ரலில் 46 சதவீதமாக வீழ்ச்சியாக கருதி, கச்சா எண்ணை இறக்குமதியை படிப்படியாக குறைத்துக் கொண்ட இந்தியா, இப்போது ரஷ்யாவிடம் இருந்து பெரும் பகுதியை இறக்குமதி செய்கிறது.

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர், ஒரு பேரலுக்கு 30 சதவீதம் தள்ளுபடி என்ற அடிப்படையில், இந்தியாவுக்கு வழங்குகிறது. அத்தகவல்படி, மிகப் பெரிய அளவில் கச்சா எண்ணையை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவுக்கான முன்னணி கச்சா  எண்ணை வினியோகஸ்தர்களாக இருந்த ஈராக் மற்றும் சவுதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளி, ரஷ்யா இப்போது முதலிடம் பெற்றுள்ளது.

ஏப்ரல் மாதத்தின் நிலவரப்படி இந்தியா தினமும் 46 லட்சம் பேரல் கச்சா எண்ணையை இறக்குமதி செய்தது. இதில், ஓபெக் கூட்டமைப்பின் பங்களிப்பு 21 லட்சம் பேரல், ரஷ்யாவின் பங்களிப்பு 16 லட் சத்து 70 ஆயிரம் பேரல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கச்சா எண்ணை சுத்திகரிப்பில் உள்ள பல நிறுவனங்கள், ரஷ்யாவின் எண்ணையை வாங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால், இந்தியாவுக்கான கச்சா எண்ணை ஏற்றுமதியை, ரஷ்யா தொடர்ந்து உயர்த்திக் கொண்டிருக்கிறது.