அதிகரிக்கும் வெப்ப அலை – ஐ.நா அலெர்ட்.!!

கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது நிலவிவரும் கடுமையான வெப்ப அலை காரணமாக 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை ஐக்கிய நாடுகள் சபை மக்களுக்கு அறிவித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் சுமார் 24 கோடி குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் இருதய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வீடுகளிலும், பாடசாலைகளிலும் குழந்தைகள் வெயிலில் விளையாடுவதை தவிர்க்கவும், கோடை காலத்திற்கு ஏற்ற ஆடைகளை அணியவும் அறிவுறுத்தியுள்ளது.