கொட்டும் மழையில் மின்சாரத்துறை பணியாளர்கள் மக்கள் பணி..!

செங்குன்றம் அடுத்த சோழவரம்  ஒன்றியத்தில் உள்ள சோழவரம் மின் பிரிவு பொறியாளர் தேவராஜ் தலைமையில் நேற்று காற்றுடன் கூடய கனமழை பெய்ததால் பார்த்தசாரதிநகர், பண்ணீர்வாக்கம், நல்லூர், விஜயநல்லூர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி சர்வீஸ் சாலை போன்ற பகுதிகளில் மின்வாரிய பணியாளர்களை கொண்டு 11 கிலோ ஓல்டு  சிறுனியம் பீடர், உயர் அழுத்த மூன்று மின்கம்பங்களை சுமார் இரண்டு மணி நேரம் கொட்டும் மழையில் மாற்றி பணியை மேற்கொண்டு சீரான மின்சாரம் விநியோகம் வழங்கப்பட்டது.