கோவை பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் செயின் திருட்டு..!

கோவை அருகே உள்ள வேளாண்டிபாளையம் மருத கோனார் வீதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அமிர்தவல்லி (வயது 75) இவர் நேற்று சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் ரோட்டில் டவுன் பஸ்ஸில் பயணம் செய்தார். அங்குள்ள கலா மன்றம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சை விட்டு இறங்கும் போது இவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை காணவில்லை .யாரோ பஸ்பில் வைத்து திருடிவிட்டனர் . இது குறித்து அமிர்தவல்லி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..