நள்ளிரவில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு..!

கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோடு விஸ்வேஸ்வரா நகரில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. சம்பவத்தன்று கோவில் பூசாரி விவேக் என்பவர் பூஜை செய்து விட்டு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் ரூ. 1000 திருடப்பட்டிருந்தது. நள்ளிரவில் உள்ளே நுழைந்த மர்ம நபர் யாரோ உண்டியலில் பணத்தை திருடி சென்று விட்டனர். இது குறித்து கோவில் நிர்வாகிகள் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.