திருநங்கை வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐ.டி. ஊழியர் கைது

திருநங்கை வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐ.டி. ஊழியர் கைது

கோவை வடவள்ளி, மருதமலை பத்திரப்பதிவு அலுவலகம் பின்புறம் அன்னை இந்திரா நகர் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் திருநங்கை ஒருவர் கடந்த 29-ந் தேதி இரவு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரனை நடத்தினார்கள். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் செல்வபுரம் தெலுங்கு பாளையத்தைச் சேர்ந்த திருநங்கைசோமசுந்தரம் என்ற தனலட்சுமி என்பது தெரியவந்தது. இவர் கடந்த 3 ஆண்டுகளாக மாசிலாமணி என்பவருடன் அன்னை இந்திரா நகரில் வசித்து வந்தார். அடிககடி மும்பை சென்று விடுவாராம். தைப் பூசத்துக்கு கோவைக்கு வந்து இருந்தார். அன்னை இந்திரா நகரில் மாசிலாமணி வீட்டில் தங்கி இருந்தார். மாசிலாமணிக்கு ஒரு ஆண் நண்பர் உள்ளார் . அவர்கள் 3 பேரும் சேர்ந்து இரவு மது அருந்தினார்கள். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்து இருப்பதாகவும் தெரியவந்தது. கொலையாளியை தனிப்படை போலீசார் வலை வீசி தேடிவந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த தினேஷ் கந்தசாமி என்பவரை வடவள்ளி போலீசார் இன்று கைது செய்தனர். விசாரணையில் இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருவதும், தைப்பூச திருவிழாவுக்கு மருதமலைக்கு வந்ததாகவும் அப்போது அவரை திருநங்கைகள் அழைத்துச் சென்று தாக்கி அவரது பணத்தை பறித்துக் கொண்டதாகவும், இதனால் பழிதீர்ப்பதற்காக இந்த கொலையை செய்ததாகவும் கூறி உள்ளார். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.