கோவை அருகே 2 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் இன்று திடீர் சோதனை..!

கோவை அருகே உள்ள ஆலந்துறை பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் இவர் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி ஆவார். காளப்பட்டி பகுதியில் வசிப்பவர் முருகன். இவர்களது இருவரது வீட்டில் என். ஐ. ஏ அதிகாரிகள் இன்றுசோதனை நடத்தினார்கள். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு காவல்துறை நடத்திய வாகன சோதனையில் கைதுப்பாக்கி, வெடி மருந்து, முகமூடி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இரண்டு பட்டதாரி வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். தீவிரவாத கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து என் ஐ. ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு தொடர்பாக கோவையில் உள்ள இரு வீடுகளில் இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.