கோவையில் கோவில் பூட்டை உடைத்து சாமி நகைகள, உண்டியல் திருட்டு.!!

கோவை கணபதி வரதராஜுலு நகரில் செல்வ விநாயகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் யாரோ கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த வெள்ளி பொருட்கள் ,வெள்ளி உண்டியல் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இது குறித்து கோவில் குருக்கள் சீனிவாசன் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.