பட்டப்பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீடு புகுந்து செல்போன்,லேப்டாப் கொள்ளை..!

கோவை சரவணம்பட்டி திரு.வி.க வீதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 29). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகீறார். சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்த அவர் குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றார். அப்போது வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அவரது அறையில் இருந்த லேப்டாப், செல்போன், பாஸ்போர்ட் ஆகியவற்றை திருடிச் சென்றனர். குளியல் அறையில் இருந்து வந்த ராஜ்குமார் அறையில் இருந்த பொருட்கள் திருட்டு போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம் பக்கத்தில் யாராவது மர்ம நபர்கள் இருக்கிறார்களா என்று தேடிப்பார்த்தார்.ஆனால் அங்கு யாரும் இல்லை.
இதுகுறித்து ராஜ்குமார் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்து திருட்டி ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.