ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 8 பேர் பலி- 10 லட்சம் நிதி..!

ந்திரா நெல்லூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில்8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் நெல்லூர் கந்துக்கூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் படுகாயமடைந்தவர்களை சந்திரபாபு நாயுடு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.