சூலூர் அருகே கோவில் மண்டபத்தை இடித்து தள்ளிய லாரி – டிரைவர் கைது.!!

கோவை சூலூர் அருகே அரசூர் பகுதியில் அருள்மிகு. மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்பகுதியில் பெரிய காலி இடம் மற்றும் முன் மண்டபம் கட்டப்பட்டிருந்தது. இரவில் கர்நாடக மாநிலத்திலிருந்து இரும்பு பாரம் ஏற்றி கொண்டு சரவணம்பட்டி செல்ல அரசூர் வழியாக ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது இரவு நேரமாக இருந்ததால் லாரி டிரைவர் அந்த கோவில் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கிவிட்டார். அவர் மீண்டும் அதிகாலையில் லாரியை எடுத்த போது எதிர்பாராத விதமாக கோவிலின் முன் மண்டபத்தில் லாரி மோதியது. இதில் மண்டபம் சேதமடைந்தது. இது குறித்து புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்.