ஒரே பெண்ணை 2 பேர் காதலித்தால் தகராறு… தந்தை, மகனை இரும்பு தடியால் தாக்கி கொல்ல முயற்சி..!

கோவை பீளமேடு அண்ணா நகர் ஆறுமுகம் லேஅவுட் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் அந்த பகுதியில் மெஸ் நடத்தி வருகிறார் .இவரது மகன் ஹரிஹரன் (வயது 22) அவரது தந்தையின் ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.இவர் ஆவராம்பாளையத்தைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற பெண்ணை காதலித்தாராம்.அதே பெண்ணை விக்னேஷ் என்பவரும் காதலித்து வந்தாராம். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் விக்கி என்ற விக்னேஷ் தனது நண்பர்கள் 2 பேருடன் ஹரிஹரன் வீட்டுக்கு சென்று தகராறு செய்தார். அவரை சுத்தியலால் தாக்கினாராம். இதை தடுத்து அவரது தந்தை ராஜசேகரை இரும்பு கம்பியால் தாக்கினார்கள். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் வீட்டிலிருந்து பொருட்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு 3 பேரும் தப்பி ஓடி விட்டனர். படுகாயம் அடைந்த ஹரிஹரன் தந்தை ராஜசேகர் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஹரிஹரன் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விக்கி என்ற விக்னேஷ் உட்பட 3 பேர் மீது கொலை முயற்சி தாக்குதல் உட்பட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.