மனைவிக்கு வீடியோ காலில் பேசி விட்டு கணவர் கோவை லாட்ஜில் தூக்கிட்டு தற்கொலை..

கோவை பிப்ரவரி 14 கேரள மாநிலம் மலப்புரம் பள்ளிப் பரம்பாவைசேர்ந்தவர் முகம்மது பனிஷ் ( வயது 32)குடிப்பழக்கம் உடையவர்.இவர் மனைவியுடன் தகராறு செய்துவிட்டு நேற்று கோவைக்கு வந்தார். கோவை ரயில் நிலையம் எதிர்புறம் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.நேற்று மாலையில் அவர் வீடியோ காலில் தனது மனைவிக்கு போன் செய்தார். அப்போது இன்னும் சிறிது நேரத்தில் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார்.இது தொடர்பாக அவரது மனைவி, கணவரின் அண்ணனுக்கு போன் செய்தார். அவர் கோவைக்கு வந்து பார்த்தபோது தம்பி தங்கியிருந்த அறையின் கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவை திறந்து பார்த்தபோது முகமது பனீஸ் மின்விசிறியில் பெட் சீட்டை கட்டி தூக்கில் தொங்கியது தெரியவந்தது .இது குறித்து அவரது அண்ணன் ரியாஸ் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..