மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள ஜமீன் ஊத்துக்குள, குப்பண்ண செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் ( வயது 55 )கூலி தொழிலாளி. இவருக்கும் இவரதும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. முத்துக்குமார் குடிப்பழக்கம் உடையவர் இந்த நிலையில் நேற்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்துக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் வயிற்றில் குத்தினார்.இதில் அவர் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளார் . இது குறித்து பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் முத்துக்குமாரை நேற்றிரவு கைது செய்தனர் .இவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..