கோவை நுண்ணறிவு பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் திடீர் இடமாற்றம்..!

கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் பிரபாகரன் இவர் தற்போது பதவி உயர்வு பெற்று புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார் . இதேபோல தேனி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் சுரேஷ் கோவை மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 46 டி.எஸ்.பி.கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.