மதுராந்தகத்தில் தி.மு.க இளைஞரணி சார்பில் மாபெரும் ரத்த தான முகாம்.!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி திமுக சார்பில் இளைஞரணி அமைப்பாளர் துர்கேஷ் அவர்களின் ஏற்பாட்டில் தமிழக முதல்வர் தளபதி அவர்களின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம் மாமண்டூரில் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட குழு பெருந்தலைவர் செம்பருத்தி, மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் படாளம் சத்திய சாய் ஆகியோர் கலந்துகொண்டு இந்த ரத்ததான முகாமை தொடங்கி வைத்தனர்.
இதில் மதுராந்தகம் ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் 100 மேற்பட்டோர் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்தனர் அவர்களுக்கு ரத்தம் செய்ததற்கான நற்சான்று வழங்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ரத்தம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.