15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – ஓட்டல் ஊழியர் கைது..!.

கோவை : தென்காசி மாவட்டம் .சிவகிரியை சேர்ந்தவர் நந்தகுமார் ( வயது 33 ) இவர்பீளமேடு நவ இந்தியா பகுதியில் தங்கி இருந்து ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஆர் .எஸ். ரோட்டில் 15 வயது சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து சென்ற நந்த குமார் திடீரென்று அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி கூச்சலிட்டார் .உடனே நந்தகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தகுமார் கைது செய்தனர்.இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.