பில்டிங் காண்ட்ராக்டரிடம் ரூ.16 லட்சம் மோசடி- 2 பேர் கைது..!

கோவை சவுரிபாளையம் மீனாஎஸ்டேட்டை சேர்ந்தவர் செந்தில் ஆனந்த் ( வயது 47) பில்டிங் கட்டுமான காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கோவையை சேர்ந்த சுதாகர் (வயது 65) அவரது நண்பரான புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா (வயது 50) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் செந்தில் ஆனந்திடம் எலக்ட்ரிக் வாகனம் “சார்ஜர்” செய்யும் கம்பெனியில் ரூ.16 லட்சம் முதலீடு செய்தால் மாத வருமானமாக ரூ. 60 ஆயிரம் கிடைக்கும் என்று தெரிவித்தனர். அதை நம்பி செந்தில் ஆனந்த் ரூ.16 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தார் .ஆனால் அவர்கள் கூறியபடி பணத்தை தரவில்லை. இதனால் அதிர்ச்சி இருந்து செந்தில் ஆனந்த் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி தராமல் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.இது தொடர்பாக பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுதாகர், ராஜா ஆகியோரை கைது செய்தனர் .இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..