குடி மகன்களே உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி இதோ… ஆர்டர் பண்ணுங்க.. 10 நிமிடத்தில் மது உங்க வீடு தேடி வருதாம்… ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு…

ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று பத்து நிமிடத்தில் மதுபானம் டெலிவரி செய்யப்படும் என்று அறிவித்துள்ளதால் குடிமகன்கள் குஷியில் உள்ளனர்.

வெறும் பத்து நிமிடங்களில் மதுபானம் டெலிவரி செய்யப்படும் என்று ஸ்டார்ட் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இது குடிமகன்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சாதாரணமாக உணவு டெலிவரி செய்வதற்கே 30 நிமிடத்திற்கு மேல் ஆகும் நிலையில் வெறும் பத்து நிமிடத்தில் டெலிவரி என்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கொல்கத்தாவில் இன்னோவெண்ட் டெக்னாலஜீஸ் நிறுவனம் பூஸி (Boozie) பிராண்டு வாயிலாக பத்து நிமிடத்தில் மதுபானங்களை டெலிவரி செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சில நிறுவனங்கள் மதுபான டெலிவரி செய்து வந்தாலும் பத்து நிமிடம் டெலிவரி என்பது சற்று வித்யாசமாக உள்ளது. இதற்கு மேற்குவங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. பூஸியில் மதுபானம் ஆர்டர் செய்தால் அருகில் உள்ள மதுக் கடைகளில் இருந்து மதுபானம் வாங்கப்பட்டு வாடிக்கையாளர்களிடம் பத்து நிமிடத்தில் டெலிவரி செய்யப்படும். வாடிக்கையாளர்களின் நடவடிக்கைகள் ஆர்டர் செய்யும் போக்கு போன்றவற்றை கண்காணிக்க பூஸி ஆப்பில் ஏஐ அம்சங்களும் உள்ளது. குறைந்த செலவில் டெலிவரி செய்வதற்கும் வழிவகை செய்கிறது. அதுமட்டுமல்லாமல் வயது வராதவர்களுக்கு மது பானங்களை தவிர்ப்பது, கலப்படம், அளவுக்கு மிஞ்சிய மது அருந்துதல் போன்றவற்றை கட்டுப்படுத்தவும் பூஸி ஆப்பில் வசதிகள் உள்ளன.