குரைத்ததால் நாயை அரிவாளால் வெட்டி கொன்ற லாரி டிரைவர் கைது.

மேட்டுப்பாளையம் தாசம்பாளையம் ரோட்டில் உள்ள மணி நகரைச் சேர்ந்தவர் சின்ராஜ் என்ற பத்திரப்பன் (வயது55) லாரி டிரைவர்,குடிப்பழக்கம் உடையவர் இவர் நேற்று மாலை குடிபோதையில் மணிநகர் உயர்நிலைப் பள்ளிக்கூடம் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நாய் அவரைப் பார்த்து குரைத்தது.இதனால் ஆத்திரமடைந்த பத்திரப்பன் அவரது கையில் வைத்திருந்த அரிவாளால் அந்த நாயை சரமாரியாக வெட்டினார் அதே இடத்தில் நாய் துடிதுடித்து இறந்தது. இது குறித்து மணிநகர் முரளிதரன் என்பவர்மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பத்திரப் பனை கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.