திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது..!

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சக்தி தங்கவேல் (வயது 23) தனியார் நிறுவனத்தில் ஊழிராக வேலை பார்த்து வருகிறார்.இவர் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண்ணுடன் “இன்ஸ்டாகிராம்” மூலம் நட்பு வைத்திருந்தாராம். பின்பு அது காதலாக மாறியது. இந்த நிலையில் சக்தி தங்கவேல் தனது காதலியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி உடலுறவு கொண்டாராம்..இதில் அந்தப் பெண் 2 மாத கர்ப்பமானார்.இது தொடர்பாக சக்தி தங்கவேலுடன் கூறிய போது அவர் காதலியை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து அந்த பெண் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் கேத்தரினா மேரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சக்தி தங்கவேலுவை கைது செய்தார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..