இந்தியாவின் சக்தி இசைக் குழுவுக்கு ‘கிராமி’ விருது.!!

ந்தியாவின் சக்தி இசைக் குழுவினருக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருதான கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைத்துறையினருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுவது போல இசைக்கலைஞர்களுக்கு உலகின் மிகப் பெரிய விருதாக கருதப்படுவது அமெரிக்காவின் கிராமி விருது.

கடந்த 1951ம் ஆண்டு முதல் இன்று வரை ஒவ்வொரு வருடமும் இந்த விருதுகளை தேசிய ஒலிபிடிப்பு கலைகள் மற்றும் அறிவியல் அகாடெமி வழங்கி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவினருக்கு ‘கிராமி விருது’ வழங்கப்பட்டுள்ளது.

ஆல்பம் பிரிவில் சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், உஸ்தாத் ஜாகீர் உசேன் அடங்கிய சக்தி இசைக்குழுவுக்கு இந்த கிராமி விருது கிடைத்துள்ளது. ஷக்தி குழுவின் ‘This moment’ ஆல்பத்திற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு RRR படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கிராமி விருது கிடைத்தது.