கோவையில் 15 டன் மற்றும் 7 டன் எடை கொண்ட 2 அரச மரங்கள் இன்று மறு நடவு..!

கோவை தடாகம் சாலை நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக வெட்டபட இருந்த 25 மரங்களை கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில்
(ஒரு சமூக செயற்பாட்டு களம்) அமைப்பின் சார்பில் வேறுடன் அகற்றப்பட்டு வேலாண்டிபாளையம், கோவில்மேடு பகுதியில் மறு நடவு செய்யப்பட்டது.
இதில் 21 மரங்கள் துளிர்த்துள்ளது. இந்தநிலையில் டிவிஎஸ் நகர் பேருந்து நிறுத்தத்தில் நன்கு வளர்ந்திருந்த அரச மரத்தின் கிளைகள் நறுக்கப்பட்டு 15 அடி உயரம் உள்ள 15 டன் எடை கொண்ட அரச மரத்தையும், 7 டன் எடை கொண்ட அரச மரத்தையும் 3 கிலோ மீட்டர் தூரம் மிகுந்த கவனத்துடன் எடுத்து வரப்பட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு மறு நடவு செய்யப்பட்டது. அப்போது அனைவரும் கைதட்டி வரவேற்றனர்..