அரசு பஸ் டிரைவரை தாக்கி கொலை மிரட்டல் – ஆட்டோ டிரைவர் கைது..!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்முத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துவேல் ( வயது 43) அரசு பஸ் டிரைவர். நேற்று இவர் பொள்ளாச்சியிலிருந்து கருப்பம்பாளையத்துக்கு அரசு டவுன் பஸ்சை ஒட்டிச் சென்றார். அங்குள்ள காளிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே ஒருவர் ஆட்டோவை பஸ்சின் குறுக்கே நிறுத்தி செல்ல விடாமல் தடுத்தார். பஸ் டிரைவர் முத்துவேல் கீழே இறங்கி வந்து தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த ஆசாமி பஸ் டிரைவர் முத்துவேல் சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசில் புகார் செய்யப்பட்டது .சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் விரைந்து சென்று வால்பாறை ஒத்த பாறையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரதீப் (வயது 25 )என்பவரை கைது செய்தார். இவர் மீது அரசு ஊழியரை பணி செய்யக்கூடாது தடுத்தல், கொலை மிரட்டல், தாக்குதல் உட்பட 5 பிரிவின்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..