வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 2.75 லட்சம் மோசடி..!

கோவை சிட்கோ காந்திஜி ரோட்டை சேர்ந்தவர் மோகன் தாஸ். இவரது மகன் கோபி ( வயது 31 ) இவருக்கு நாமக்கல் மாவட்டம் கொண்டி செட்டிபட்டியை சேர்ந்த மோகனகண்ணன் ( வயது 32) என்பவர் அறிமுகமானார் . இவர் கோபியிடம் தாய்லாந்தில் நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக கூறினார் . இதை நம்பி மோகன கண்ணனிடம் ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்தை கொடுத்தார். தாய்லாந்தில் வேலை தயாராக உள்ளது .நீங்கள் தாய்லாந்து போய் சேர்ந்ததும் ஒருவர் உங்களை அந்த நிறுவனத்திற்கு அழைத்துச் செல்வார் என்று கூறினார். இதை நம்பி கோபி தாய்லாந்து சென்றார். அவரை யாரும் அழைக்க வரவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோபி கோவைக்கு திரும்பினார். இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.