டிப்பர் லாரி திருடியவரை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைப்பு.!!

கோவை சிங்காநல்லூர், உப்பிலிபாளையம் சி.எம்.சி. காலனி | சேர்ந்தவர் முருகேசன் ( வயது 42) சொந்தமாக டிப்பர் லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவரது டிப்பர் லாரியை அவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். அதை ஈரோடு மாவட்டம் அந்தியூர் ,பெரியார் நகர் காலனி சேர்ந்த ஸ்ரீதர் (வயது 28) என்பவர் திருட முயன்றார்.. அவரை முருகேசன் கையும் களவுமாக பிடித்து சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்தனர். இவர் தற்போது வரதராஜபுரம் சி.எம்.சி. காலனியில் வசித்து வருகிறார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.