மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டு மீண்டும் வாங்க… OPS- க்கு EPS அழைப்பு..?

திமுகவில் கடந்த சில மாதங்களாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் அதிமுகவின் கழகப் பொதுச் செயலாளராக இபிஎஸ் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் தவறை உணர்ந்து மீண்டும் இணைவதாக இருந்தால் மன்னிப்பு கடிதம் தரவேண்டும் என இபிஎஸ் கூறியுள்ளார்.

கட்சி பொதுச்செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுக உறுப்பினர்களாக கருதப்படுபவர். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தொட்டே இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது என்று கூறியுள்ளார். இபிஎஸ் வெளியிட்டுள்ள இந்த திடீர் அறிக்கை ஓபிஎஸ்-க்கு அவர் விடுத்த மறைமுக அழைப்பாகவே பார்க்கப்படுகின்றது..