இருகூர் அருகே தோட்டத்தில் கள் விற்றவர் கைது.

கோவையைஅடுத்த இருகூர் பக்கமுள்ள ஏ.ஜி.புதூரில் ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில் கள் விற்பனை செய்வதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இருகூர் ,ஏ.ஜி .புதூர் ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்த நடராஜ் (வயது 55) கைது செய்யப்பட்டார். 14 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.