சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக 4 மாவட்டங்களில் ஜிஎஸ்டி செலுத்த 27ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக வணிகவரித்துறை அறிவிப்பு

வணிகவரித்துறை ஆணையர் ஜகந்நாதன் வெளியிட்ட அறிக்கை: மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட இயற்கை பேரிடரின் தாக்கத்திலிருந்து மீட்பதற்கு தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு வருவாய் மாவட்டங்களில் முதன்மை வணிகயிடங்களை கொண்டுள்ள வணிகர்கள், தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் விதிகள் 2017-இன் கீழ் நவம்பர் 2023க்கான ஜிஎஸ்டிஆர் 3பி படிவத்தை தாக்கல் செய்ய வேண்டிய நாள் டிச.20ஆக இருந்தது டிசம்பர் 27 வரை நீட்டித்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள வருவாய் வணிகர்கள், டிசம்பர் 27 வரை படிவம் தாக்கல் செய்வதற்கு தாமதக் கட்டணம் மற்றும் வட்டி செலுத்த வேண்டியதில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது