கஞ்சா கடத்தல் – டான்சர், ஆட்டோ டிரைவர் கைது.!!

கோவை கடைவீதி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சசிகலா நேற்று மாலை தெற்கு உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள தண்ணீர் டேங்க் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணை அவர் தெற்கு உக்கடம் ஹவுசிங் யூனிட், புல்லுக்காடு பகுதியைச் சேர்ந்த நெல்சன் மகன் எடிசன் (வயது 20) என்பது தெரிய வந்தது. இவர்கலை நிகழ்ச்சிகளில் டான் சராக பங்கேற்று வந்தார்.இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.

இதே போல ஆர் .எஸ் .புரம். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் நேற்று சீரநாயக்கன்பாளையம் கருமலை செட்டிபாளையம் பொதுக் கழிப்பீடம் அருகே சந்தேக படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார் . அவரிடம் 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது . இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் வீரகேரளம் சிறுவாணி ரோட்டை சேர்ந்த பீடி ரமேஷ் (வயது 33) என்பது தெரிய வந்தது. இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்தார். இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..