சூலூரில் மழை வேண்டி சிறப்பு யாகம் – கூட்டு பிரார்த்தனை.!!

சூலூர் ஆர் வி எஸ் சாய் பாபா, தாத்தா தேயர் திருக்கோவிலில் கோடை வெயிலில் தாக்கம் குறையவும் மழை பொழியவும் சிறப்பு யாகம் மற்றும் கூட்டு பிரார்த்தனை ஆர்.வி.எஸ் . நிறுவனர் ஐயா கே. வி. குப்புசாமி அவர்கள் துவங்கி வைக்க தண்ணீரில் அமர்ந்து பூஜை நடைபெற்றது வருகை தந்த பக்தர்கள் தம்பதியராக அமர்ந்து அனைவருக்கும் மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டு மரக்கன்றுகளுக்கு பூஜை செய்து வருண பகவானுக்கு சிறப்பு அர்ச்சனை நாமாவளிகள் சொல்லி யாகம் நடைபெற்றது. தொடர்ந்து கூட்டு வழிபாடாக இறைவனை பிரார்த்தித்து நிலவுகின்ற கால சூழ்நிலையில் அக்னியின் கொடூரமும் மழையின்மையால் உலக உயிர்கள் தண்ணீர் இன்றி தவிப்பதை நிறுத்தி இயற்கை செழிப்புற பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வினை சாய் அருள் முதலியார், முத்து கவுண்டன் புதூர் விவேகானந்தன், ஏரோ இன்ஜினியரிங் குமரேசன் உள்ளிட்டோர் நிகழ்வினை நடத்தினர் .வருகை தந்த அனைத்து குடும்பங்களுக்கும் பல வகை மரக்கன்றுகள் செடிகள் வழங்கப்பட்டது.