கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..! கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி கனியூர் டோல்கேட் அருகே கருமத்தம்பட்டி போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மாருதி காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கஞ்சாவும் |காரும் பறிமுதல் செய்யப்பட்ட.து .இது தொடர்பாக அதை கடத்தி வந்த சதீஸ் என்ற வெங்கடேஸ்வரன் ( வயது 33)என்பவர் கைது செய்யப்பட்டார் .இவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் பக்கம் உள்ள ஆலப்பசசேரியை சேர்ந்தவர் ஆவார்.இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் கிராந்தி குமார் உத்தரவின் பேரில் சதீஷ் என்றவெங்கடேஸ்வரன் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு நேற்று வழங்கப்பட்டது..