247 கிலோ குட்கா பறிமுதல்- வடமாநில வியாபாரி உள்பட 2 பேர் கைது.

கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன், சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் நேற்று கலங்கல் ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது அங்கு 247 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அதன் உரிமையாளரான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தர்ஜாராம் ( வயது 30)ஊழியர் பீரா ராம் (வயது 46) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்..இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.