சேவல் சண்டை நடத்தி சூதாட்டம் – 4 பேர் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையம் சிவன் கோவில் இட்டேரி அருகே நேற்று சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக மாக்கினாம்பட்டியை சேர்ந்த குட்டி (வயது 24) டி. கோட்டம் பட்டி, தினேஷ் (வயது 20)குரும்பபாளையம் ஆறுச்சாமி (வயது 45) பொள்ளாச்சி சி.டி.சி.மேடு சூர்யா (வயது 26 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .சூதாட பயன்படுத்தப்பட்ட பணமும், 2 சேவல்களும் பறிமுதல் செய்யப்பட்டது.