வீடு புகுந்து 50 வாத்துக்கள், கோழிகள் திருட்டு – மர்ம நபருக்கு வலை..!

கோவை போத்தனூர் அண்ணா நகர் முதல் வீதியை சேர்ந்தவர் முருகவேல் இவரது மகன் ரகு (வயது 25) இவரது வீட்டு மாடியில் கூண்டில் வைத்து 50 வாத்து , 4 கோழி வளர்த்து வருகிறார். 4-ந் தேதி கூண்டை பூட்டிவிட்டு தூங்க சென்று விட்டார். நேற்று காலையில் பார்த்தபோது கூண்டில் இருந்த 50 வாத்துகள் 4 கோழி ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது போத்தனூர் போலீசில் ரகு புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.