பவானிசாகரில் இலவச கண் மருத்துவ சிறப்பு முகாம்..!

ஈரோடு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பவானிசாகர் அனைத்து வணிகர் சங்கம்,  ஒய்ஸ்மென் சங்கம், தொட்டம்பாளையம் மனவளக்கலை யோகா தவ மையம் மற்றும் ஈரோடு அரசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பவானிசாகர் பகுதியில் உள்ள பகுடுதுறை மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் அப்பகுதி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கண் பரிசோதனைக்காக முகாமிற்கு வந்தனர். இதில் மருத்துவ குழுவினர் கண்களை பரிசோதனை செய்து குறைபாடுடைய 24 பேரை கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக கண்புரை  அறுவை சிகிச்சை செய்வதற்காக ஈரோடு அழைத்துச் சென்றனர்.