மைனர் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த டிரைவர் கைது..!

ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலை பகுதியைச் சேர்ந்த டிரைவர் ராமு (21). இவர் சத்தியமங்கலம் குள்ளங்கரடு பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள 17 வயது மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடம்பூர் அழைத்து சென்று அங்குள்ள மல்லியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு இருவரும் தலைமறைவாகினர். இது குறித்து மைனர் பெண்ணின் பெற்றோர்  சத்தியமங்கலம் போலீசில் புகார்  அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான இருவரை தேடி வந்த நிலையில் கர்நாடக மாநிலம் நொக்கனூர் பகுதியில் இருவரும் தங்கியிருந்ததை போலீசார் கண்டுபிடித்து அழைத்து வந்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் ராமு மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.