ஏலச்சீட்டு நடத்தி ரூ 40லட்சம் மோசடி-பெண்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு ..!

கோவை ரத்தினபுரி சின்னப்பன் விதியை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி மஞ்சுளா (வயது 50)கூலி தொழிலாளி .இவர் உட்பட 12 பேர் அதே பகுதியில் சிட்பண்ட்ஸ் நடத்தி வரும் பாபு ,செல்வி, ஆனந்தி, ஆகியோரிடம் ஏலச்சீட்டு போட்டிருந்தார்கள். தவணை காலம் முடிவு அடைந்ததும் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் 12 பேரிடமும் சுமார் ரூ 40 லட்சம் வரை மோசடி செய்துவிட்டு அந்த 3 பேரும் தலைமறைவாகிவிட்டனர். இது குறித்து மஞ்சுளா ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார் .போலீசார் பாபு, செல்வி, ஆனந்தி, ஆகியோர் மீது மோசடி உட்பட 4பிரிவுகள் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..