தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருட்டு – 2 பேர் கைது..!

கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் விநாயகர் நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் குணசேகரன் ( வயது 24) தனியார் கார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வடவள்ளி கே ஜி மில் ஓம் சக்தி கார்டனில் புதிதாக வீடு கட்டி வருகிறார். யாரோ இவரது வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த மின் ஒயர்கள், பெயிண்ட் மிக்சிங் மிஷின் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இது குறித்து குணசேகரன் வடவள்ளி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தொண்டாமுத்தூர் மல்லிகை நகரை சேர்ந்த பிரபாகரன் (வயது 27 )புதூர் புது காலணியை சேர்ந்த திவாகரன் (வயது 26) ஆகியோரை கைது செய்தனர் . இவர்களிடமிருந்து திருட்டு பொருட்கள் மீட்கப்பட்டது .மேலும் விசாரணை நடந்து வருகிறது.