கோவையில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு வன காவலர் பலி..

கோவை மாவட்டத்தில்கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் மேட்டுப்பாளையம், சிறுமுகை பழத்தோட்டம் ரெஸ்ட் ஹவுஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் ( வயது 49 )மேட்டுப்பாளையம் வனச்சரக சுண்டப்பட்டி பிரிவில் வனகாவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் வெங்கடேஷ் நேற்று மதியம் வனக்காப்பாளர் ராஜ்குமார், வேட்டை தடுப்பு காவலர் நாகராஜ் ஆகியோருடன் சுண்டப்பட்டி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கடுமையான வெயில் சுட்டெரித்தது. இதனால் திடீரென்று வெங்கடேஷ் மயங்கி விழுந்தார் .அவரை வனத்துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.