மகளிர் தினத்தை உற்சாகமாக கொண்டாடிய பெண் சிறை கைதிகள்..!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று 08.03.23 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்கள் தனி சிறைகள்,பெண்கள் தனி  கிளைச்சிறைகள் மற்றும் பெண்கள் கிளை சிறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் சிறைவாசிகள் உலக மகளிர் தினத்தை கொண்டாடினர்.   பெண்

சிறைவாசிகளுக்கென அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உதவியோடு பல்வேறு சிறப்பு கலை நிகழ்ச்சிகள்,விளையாட்டு போட்டிகள் ஆகியவை சம்பந்தப்பட்ட சிறைத்துறை துணை தலைவர்கள்,கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற சிறைவாசிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண்கள் தனி சிறைகள் , தனி கிளைச்சிறைகள் மற்றும் பெண்கள் கிளை சிறைகளிலும் சிறப்பு உணவாக இனிப்பு,முட்டை,வெஜிடெபிள் பிரியாணி ஆகியவை தயார் செய்து அனைத்து பெண் சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டது..