குடிபோதையில் மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தந்தை கைது..!

கோவை:பொள்ளாச்சி பக்கம் உள்ள ராமபட்டினம் ,கலைஞர் நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகள் சுமித்ரா ( வயது 17) இவர் அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில்பிளஸ் 2 படித்து வருகிறார். இவரது தந்தை வெள்ளியங்கிரி ( வயது 50) குடிப்பழக்கம் உடையவர். நேற்று அவரது மனைவியை குடிபோதையில் தாக்கினார். இதை பார்த்த மாணவி சுமித்திரா அதை தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வெள்ளியங்கிரி மாணவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் அவரை பிடித்து கீழே தள்ளியதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து சுமித்ரா பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வெள்ளியங்கிரி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.இவர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.