நாய்க்கு சாப்பாடு போட்டால் திருட்டு பட்டம் கட்டுவோம் : பெண்ணை மிரட்டிய அப்பகுதி வீடுகளின் உரிமையாளர்கள் – காவல் நிலையத்தில் புகார்….!

நாய்க்கு சாப்பாடு போட்டால் திருட்டு பட்டம் கட்டுவோம் : பெண்ணை மிரட்டிய அப்பகுதி வீடுகளின் உரிமையாளர்கள் – காவல் நிலையத்தில் புகார்….!

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர் மற்றும் செந்தில் குமார் தம்பதியினர். ஜெனிபர் வீட்டு வேலை செய்து வருகிறார். அதே போல அவரது கணவர் செந்தில் குமார் கட்டுமான பணி செய்து வருகிறார். நான்கு வருடமாக ஜெனிபர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள அழகு நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்களுக்கு இரவு பத்து முப்பது மணிக்கு உணவு வழங்கி வருகிறார். இதனை அடுத்து அந்த பகுதி வீட்டு உரிமையாளர்கள் ஜெனிஃபரை பார்த்து நாய்களுக்கு உணவு வழங்கக் கூடாது இரவு நேரத்தில் உணவு வழங்கினால் உன்னை திருட்டு பட்டம் கட்டுவோம் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அதே போல அந்த பகுதி உள்ள வீட்டு உரிமையாளர்கள் உணவு வழங்காமல் அதை செத்துப் போகட்டும் எனவும் கூறி உள்ளனர். இதுகுறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஜெனிபர் புகார் ஒன்றை அளித்து உள்ளார். ஆனால் காவல் துறையினர் அழகு நகர், லட்சுமி நகர் பகுதியில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு சாதகமாக பேசி வருவது கூறப்படுகிறது.

ஜெனிபர் கூறும் பொழுது நான் இருக்கும் வரை தெரு நாய்களுக்கு உணவு வழங்கிய தான் ஆவேன் என்ன செய்தாலும் பரவாயில்லை என தெரிவித்தார்.