கத்தி முனையில் தொழிலாளியிடம் பணம் பறிப்பு- 4 இளைஞர்கள் கைது..!

கோவை போத்தனூர் அருகே உள்ள செட்டிபாளையம் ,கலைஞர் நகரை சேர்ந்தவர் மணி என்ற ஜனா மணி (வயது 39) சமையல் தொழிலாளி. நேற்று இவர் வேலை முடிந்து உக்கடம் என்.எச். ரோடு பகுதியில் நடந்து சென்றார் .அப்போது இவரை 4 பேர் வழிமறித்து கஞ்சா வாங்குவதற்கு பணம் கேட்டனர்.அவர் கொடுக்க மறுத்ததார். இதனால்  கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 900 ரூபாயை கொள்ளையடித்தனர்.பின்னர் 4 பேரும் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து மணி உக்கடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தெற்கு உக்கடம், காந்தி நகரைச் சேர்ந்த சந்திரகுமார் (வயது 20) குனியமுத்தூர் சுகுணாபுரத்தைச் சேர்ந்த முகமது ஆசிப் (வயது 21) உக்கடம் கரும்புக்கடையை சேர்ந்த அபூ யாசர் (வயது 19) செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் அப்துல் ரகுமான் (வயது 19) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.