மனைவிக்கு வரதட்சணை கொடுமை: கணவர், மாமியார், மாமனார் மீது பெண் பரபரப்பு புகார்..!

கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம் எஸ். பி. நகரை சேர்ந்தவர் ஜெயசீலன்.  இவரது மனைவி மெர்சி ருபீனா ( வயது 37 ) இவருக்கும் டாட்டா பாத் டாக்டர். ராதாகிருஷ்ணன் ரோட்டை சேர்ந்த பிரடெரிக் ஜோசப் என்பவருக்கும் 3-1- 2018 அன்று திருமணம் நடந்தது. இவர்கள் இருவருக்கும் இது 2 -வதுதிருமணம் ஆகும். மெர்சி ரூபினாவுக்கு அவரது பெற்றோர்கள் திருமணத்தின் போது 15 பவுன் நகையும்,கணவருக்கு 4 பவுன் செயினும் போட்டனர். மேலும் ரூ.1லட்சம் பணமும் கொடுத்தனர்.இந்த நிலையில் மனைவியிடம் அபுதாபி செல்வதற்கு ரூ 80 லட்சம் வாங்கி வருமாறு கூறி டார்ச்சர் செய்தாராம். இவர் திருமணம் முடிந்து.29 நாட்கள்தான் மனைவியுடன் குடும்ப நடத்தியுள்ளார். பிறரு அபுதாபி சென்று விட்டார். இதுகுறித்து மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மெர்சிருபினா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் விசாரணை நடத்தி கணவர்,பிரட்ரிக் ஜோசப்,மாமியார் ரூபா, மாமனார் ஹென்றி ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவர் பிரட்ரிக் ஜோசப் தற்போது அபுதாபியில் உள்ளார்.இவருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.